நாலு மனமே நாலு நான் tag செய்வது நாலு

ஏ) இது நம்ம ஏரியா

சங்கிலி பதிவுங்கிறாங்க… Tagங்குறாங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.. கொஞ்சம் நாளாவே தமிழ்மணத்துல உலவ சந்தர்ப்பம் கிடைக்கலை.. அதனால இருக்கும். நம்ம ஆர்த்தி இந்த tagging விளையாட்டுக்கு என்னையும் கூப்பிட்டாங்க. சரின்னு நானும் விளையாட வந்துட்டேன்.. எனக்கு பிடிச்ச நாலு(+நாலு) விஷயங்களை நாலு பேர்கிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஒரு இது.. எனக்கு பிடிச்ச நாலு மனிதர்கள் 1. அம்மா&அப்பா (பிரிக்கக்கூடாதுல்ல) 2. அண்ணா 3. என் கணவர் 4. சுற்றமும், நட்பும் எனக்கு பிடிச்ச நான் எழுதின கவிதைகள் நாலு …

Continue Reading

தினமலரில் என் வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது

ஏ) இது நம்ம ஏரியா

இன்றைய தினமலர் நாளிதழில் என்னுடைய “நினைவுகள் கனவுகள்” வலைத்தளம் இடம்பெற்றுள்ளது. தினமலருக்கும், என் பதிவு இடம்பெற முனைந்தவர்க்கும், இந்தத் தகவலை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். அன்புடன் கீதா

Continue Reading

..தினங்கள் தேவையில்லை

அ) கவிதைகள்

உள்ளத்துக் காதலை உணர்த்துவதற்கு காதலர் தினம் வரை காத்திருக்கத் தேவையில்லை தாய்மையின் பெருமையை போற்றுவதற்கு அன்னையர் தினம்தனை எதிர்நோக்கத் தேவையில்லை பெண்களின் மதிப்பை கொண்டாடுதற்கு மகளிர் தினம் வரை ஓய்ந்திருக்கத் தேவையில்லை ஒத்திவைத்தல் எதற்காக? ‘அடைக்குந்தாழ்’ எதற்காக? உள்ளத்து அன்போடும் உயர்வான பண்போடும் சீரிய கருத்தோடும் சிறந்த பணிவோடும் வாழ்ந்திருபோமேயானால் வாழும் நாளெல்லாம் அத்தகைய நாட்கள்தாம்

Continue Reading

அம்மா..

அ) கவிதைகள்

உன் மடியில் உறங்கி நீ ஊட்ட உண்டு உன் வசவில் சிணுங்கி உடன் பிறப்போடலைந்து உனை ஏய்த்து மகிழ்ந்து சின்னவளாகவே இருந்திருந்தால்.. சுற்றங்களை விடுத்து மணமொன்று புரிந்து மறுதேசம் நுழைந்து நிதமும் உனைத்தேடி நினைவினில் நீராடி ஏங்காது இருந்திருப்பேன்.

Continue Reading

தினக்கூலி

அ) கவிதைகள்

பாலம் கட்டும் பணி.. இரும்புக் கால்களினூடே நிலைத்த மனிதக் கால்கள் இரண்டுக்கும் பேதமில்லை நின்றால்தான் வாழும் நலிந்தால் அழிந்துவிடும்..

Continue Reading

பார்வைகள்..

அ) கவிதைகள்

நீலம் பச்சையென்று நித்தமொரு நிறம் பூட்டி நீந்தவிட்டேன் வார்த்தைகளை உருவில் மாற்றமுண்டு உட்பொருளோ மாறவில்லை உள்ளம் உயர்ந்திருக்க ஊணுடம்பு தடையுமில்லை.. உட்பொருள் சரிசமமே உண்மையிதை உணர்ந்திடுவாய்

Continue Reading

போதை அரக்கன்

அ) கவிதைகள்

அந்தோ எரிகிறதே அடிமனமும் பதறியதே பிஞ்சின் நிலையறிந்து பேதைமனம் துடிக்கிறதே பிஞ்சுகள் அறிந்திடாது தீதுயாது புரிந்திடாது நஞ்சினை கொடுத்தழிக்கும் வஞ்சகரை தெரிந்திடாது வந்தார் வாழவைப்போம் வினைகளினை தூரவைப்போம் பண்பாடு போற்றிடுவோம் சந்ததியைக் காத்திடுவோம் பிள்ளைகள் தேடிவரும் பெரும்பகையை நாமழிபோம்

Continue Reading

மனதின் கதை

அ) கவிதைகள்

கையில் கிடைக்காத மனதின் கதை கேட்டேன் கற்பனை ஆனாலும் கதையில் சுவையுண்டு பிரம்மன் படைத்திட்டான் புவியில் மனித இனம் மறைந்தே இருப்பதுதான் மனதின் பெருமையென்று தேடி அலைந்திட்டான் அவனின் மனதுக்கிடம் புவியில் புதைத்திட்டால் குடைந்தே எடுத்திடுவான் வெளியில் மறைத்திட்டால் பறந்தே பிடித்திடுவான் எவ்விதம் வைப்பதென யோசனை மிகக்கொண்டான் கண்டான் சிறந்த இடம் மனிதன் உடலே அ·து எங்கும் தேடும் மனிதன் தன்னுள் தேட மாட்டான் தேடத் துவங்கும் அந்நாள் வாழ்வின் காரணம் புரியும் கதையும் முடிந்தது அங்கே …

Continue Reading

உயிர்ப்பு

அ) கவிதைகள்

விகடனில் படித்த ஒரு சிறுகதையில் சாரத்தில் என் கவிதை உயிர்ப்பு இருண்ட உலகத்தில் இருவராய் உருக்கொண்டோம் எனக்கு நீதுணையாம் உனக்கு நான் துணையாம் அன்னை உணவளிக்க ஆனந்தம் பலகண்டோம் அவள்முகம் கண்டிலோமவள் அன்பினை காண்கிறோம் உயிரினில் பங்களித்தாள் எனக்கும் உனக்குமாக எத்துனை இன்பமிங்கே அத்துனை உயர்ந்தவளுக்குள் உலகம் சுருங்கிட்டதுவோ உருவம் பெருகிட்டதுவோ இங்கே இருந்திடலாம் என்றெண்ணிய எண்ணம்பொய்யாக இன்னொரு உலகம் போக நாளும் நேரமும் நெருங்க பயத்தின் மிகுதியில் நாமும் பலவிதம் யோசிக்கின்றோம் அங்கென்ன இருக்குமென்றாய் இவ்வுலகே …

Continue Reading