நிலம் எத்துனைதான் வெட்டினாலும் ழ்குழி பல தோண்டினாலும் தாங்கிடுவாள் உனையும் சேர்த்து பெ(¡)ருமைமிகு பூமி அன்னை துன்பம் வந்து நெருக்கும் போதும் துடிக்க துவள வைக்கும்போதும் பொருமை கொண்டு நீயும் வாழ்ந்தால் பெருகும் உந்தன் புகழுமிங்கு நீர் எத்துனைதான் அழுக்கிருந்தாலும் மற்றொருமுறை நீ மாசுபட்டாலும் சலிப்பின்றி உனை தூய்மைசெய்வாள் தூயவளான நீர் மங்கை கோவம் போன்ற மாசுகளெல்லாம் அடுக்கடுக்காய் உனை வந்தடைந்தாலும் தொடர்ந்து மனதினை தூய்மைபடுத்து தூயவன் நீயதை நெஞ்சினில் நிறுத்து நெருப்பு நிறைந்திருக்கும் மாசுகளெல்லாம் கொழுந்துவிட்டு …
காதலிசம்..2 (5-12-02)
உன்னுடனே நான் பேச எனக்கிங்கே சில நிமிடம் ஒருநொடியில் பேசிவிட வார்த்தைகள் ஓராயிரமாம்.. தோழி எனை அழைப்பதற்கு இதுதான உகந்த நேரம் சில நொடிகள் பேசிடினும் மணிக்கணக்காய் தோன்றிடுதே.. ஓடாத கடிகாரம் ஓடுவதேன் இந்நேரம் சில நொடியும் பறந்துவிட சிறகுகள் தாம் தோன்றியதோ ஒரு நிமிடம் பேசிவிட்டேன் உன்னுடனே என்னவனே வாழும் என் உயிரிங்கு இன்னும் ஒரு வாரகாலம்
காதலிசம்..1 (2-12-02)
பேசாத உன் விழியால் பேசுவது உன் இயல்போ? சொல்லாத வார்த்தைகளை சொல்வது உன் பார்வைதானோ? கேளாமல் என் இதயம் கேட்பதை நீ அறியாயோ? செல்லாமல் செல்வதென்ன என் உயிரும் உன்னோடு?
மரணம் (25-01-03)
மரணம் விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில் துக்கங்கள் தொடுவதில்லை தூக்கமும் கலைவதில்லை துடிக்க மறுத்த இதயத்தால் துடித்ததென்னவோ நாங்கள் தான் மரணம் மறுக்க இயலாத மலர்மாலை வேண்டிச் நின்றால் வருவதில்லை வந்தபின்னர் செல்வதில்லை தேடிச்சென்றால் பெருமையில்லை தேடிவந்தால் வரவேற்புமில்லை மரணம் சலனம் இல்லாத சாந்தநிலை இன்ப துன்பம் தெரிவதில்லை இழப்பும் உனக்கு புரிவதில்லை மண்ணில் வாழும் காலம் முடிய மனிதம் அற்றுபோகும் நிலை மரணம் மாற்ற முடியாத மாற்றுச் சட்டை மனித உடல் தேவையில்லை மண்ணில் இனி வாழ்வதற்கு …
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனியவை நிறையட்டும் துன்பங்கள் குறையட்டும். இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் எல்லா நலமும் எல்லா வளமும் தந்து வாழ்த்தட்டும் என்று வணங்கி மீண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்வது உங்கள் சகோதரி கீதா
ஜீவாவின் – வெண்பா வடிக்கலாம் வா
ஜீவாவின் வெண்பா ஆர்வத்தினால் விளைந்த பயன் இது. ஒருவழியா வெண்பாவும் தட்டிட்டு வந்தேன் இருவிழியால் ஒப்பிட்டு பாரு – பொருந்தி வரவேண்டும் என்றே வணங்கியே நின்றேன் அரங்கனே உன்தாள் சரண் கடைசி வரி நான் மாத்திட்டேன்.. வெண்பவுக்கு இன்னொரு இலக்கணமும் இருக்கு அது என்னன்னா அடிதோரும் மோனை அமைஞ்சிருக்கணும். குறைஞ்சது இரண்டு சீருக்காவது சீர்மோனை அமைஞ்சிருக்கணும். அதுதான் சரி. (சரிதானே கொஞ்சம் விசாரிச்சு பாருங்க?? ) நான் எழுதியதில் அடிதோரும் சீர்மோனை அமைந்திருக்கிறது (மற்றதெல்லாம் நீங்க சரிபார்த்து …
திருட்டுகள் அம்பலம்
இருட்டுப் போர்வைக்குள் திருட்டுகள் பகல் வெளிச்சத்தில் அம்பலம் சிகரெட் துண்டுகள்
மாற்றம்
நேற்றும் இந்த சாலையில்தான் பயணித்ததேன்… இதுவரை தெரியாத மேடு பள்ளம் இன்று தெரிகிறது.. என்னுள் ஒர் உயிரின் ஜனனம்.
காலம்
வட்டத்தினுள் சதுரத்தை புகுத்திவிட நினைத்தேன் ஆனால் இன்று வட்டமே சதுரமாய் *** புத்தம் புது சில்லறையா சேர்த்து வச்சும் வீணாச்சே.. செல்லாக் காசு *** கல்மனசும் கரையுமின்னு கால் கடுக்க காத்திருந்தேன்.. கரைந்தது.. காலம்
திசைகள் மார்ச் இதழில் என் சிறுகதை
இந்த மார்ச் மாத திசைகள் இதழில் என் சிறுகதை இடம்பெற்றுள்ளது தலைப்பு – செருப்பு அன்புடன் கீதா