கோவம்

அ) கவிதைகள்

எங்கிருந்து வந்தனையோ
எங்கு சென்றனையோ

தவம் செய்யவில்லை நான்
தானாக வந்தாய் நீ

வழியனுப்பவில்லை நான்
வந்தவழி சென்றாய் நீ

வந்த சில நாழிகையில்
என்வசத்தில் நானில்லை

வசவுமொழி கேட்டனரோ
வாயடைத்து நின்றனரோ?

கடும்பார்வை கண்டனரோ
கண் கலங்கிச் சென்றனரோ??

என்னை நீ ட்கொள்ள
எங்கே நான் சென்றுவிட்டேன்

என் சிரத்தில் நீயேற
உன் அடிமை ஆனேனோ?

என் உடமை நீயில்லை
என்னை நீ விட்டுவிடு

வாராமல் நீ இருந்தால்
வாயில்ல பூச்சிதான் நான்

ஆனால்..
வாழவேண்டும் நானும்தான்

என் அடிமை ஆவதென்றால்
வந்து.. கண்டு.. சென்றுவிடு

1 thought on “கோவம்”

Leave a Reply to Vasanth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *