நினைவஞ்சலி

அ) கவிதைகள்

DSCN1729

 

முதலாமாண்டு நினைவஞ்சலி

அன்புள்ள அப்பா,
உன்னுடைய அன்பிற்கு
வாய் பேசத் தெரியாது.
வார்த்தைகள் உரைத்ததில்லை
உள்ளிருக்கும் உள்ளத்தை.

எனக்குப் பிடிக்கும் என்பதாலேயே
எழும் முன்னே காத்திருக்கும்
நீ காத்திருந்து வாங்கி வந்த
இடியாப்பமும், தேங்காய்ப்பாலும்…

காய்ச்சலில் நான் கிடக்க
கசப்பினில் நா தவிக்க
அவசரமாய் வந்திறங்கும்
அலுபுக்காரா பழமெல்லாமும்…

நீ பறித்து வந்த முல்லைப் பூவும்,
நீ படுத்திருந்த ஈசி Chair–ம்
நீ சொல்லித் தந்த சதுரங்கமும்
நாம் விளையாடிய சீட்டுக் கட்டும்,

பேக்கரியும், பன் பட்டர் ஜாமும்,
பப்பாளியும், பாஸந்தியும்
சைக்கிளும், போஸ்ட் ஆபீஸும்
கண்ணாடியும், குரட்டைச் சத்தமும்

உன் ஞாபகத்தைத் தூண்டிச் செல்லும்
ஒவ்வொன்றும் உரக்கச் சொல்லும்
உன் அன்பினை உணர்த்திச் செல்லும்

அன்புள்ள அப்பா,
பறிக்க நீ இல்லாமல் – உதிர்ந்து
தரையில் வாடும் மலர்களைப் போல
இங்கு நாங்களும்…

மறைவு –  29-08-2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *