கடல்

அ) கவிதைகள்

கத்தும் கடல் சத்தம் அது எட்டும் திசை எட்டும் நித்தம் அதன் மட்டம் தனில் யுத்தம் உயிர் யுத்தம் விண்ணும் ஒளிக் கண்ணும் அதில் மின்னும் அலை மின்னும் பொன்னோ இது பொன்னோ என எண்ணும் விழி எண்ணும் பாடும் கடல் ஆடும் அதில் ஓடம் ஜதி போடும் தேடும் வலை தேடும் அதில் வாடும் உயிர் ஓடும் கொல்லும் பகல் கொல்லும் அதை வெல்லும் கலம் வெல்லும் செல்லும் அது செல்லும் மரம் (பாய்மரம்) சொல்லும் …

Continue Reading

பாலைவனச் சோலை

அ) கவிதைகள்

வீதியே வெந்திடும் வெப்பத் தணலில் ஓரமாய் பூத்திட்ட ஒற்றைச் செடியை நாடியே ஓடிடும் பட்டுக் குருகின் நாட்டியம் காண்கயில்.. அன்னையின் கைதனை அன்புடன் இறுக்கி அன்றலர்ந்த மலராய் இருவிழி விரிக்க தத்தையென தாவிடும் குழவியின் தளர் நடை காண்கயில்.. பல்வேறு கடமையும் கவலையும் சூழ தாவித் தாவித் தவித்துக் கொண்டு பாலையாய் போகும் முன்¨ர் நெஞ்சில் சோலை மலர்கிறது

Continue Reading

தூவானம்

அ) கவிதைகள்

பொடிப் பொடியாய் விழும் சர்கரைத் தூரல் விழிவிரித்து பார்க்கயிலும் வந்தவழி காணல் ரோமத்தில் நீ மிதக்க கண்ணுக்குள் ஜில்லிப்பு நாவில் விழுந்தவுடன் நெஞ்சுக்குள் தித்திப்பு கையில் குடையிருந்தும் விரிக்க மனமில்லை நனைத்துதான் செல்லட்டுமே தடையாயிங்கு குடையுமில்லை

Continue Reading

தொலைந்து போன(வர்கள்)வைகள்..1

அ) கவிதைகள்

என்றோ ஒருநாள் ஏதோவொரு காகிதத்தில் அவசரமாக கிறுக்கிவைத்த நண்பனின் தொலைபேசியெண் காணக்கிடைத்தது இன்று காலங்களை வென்று கண்ணீர் பரிசென தந்து.. தொலைபேசி இருக்கலாம் பேசியவன் தொலைந்துவிட்டான் காற்றினில் கலந்துவிட்டான் எண்களைச் சுழற்றுகின்றேன்.. எண்ணியது நடக்குமா? எடுத்து அவன் பேசுவானா? செவிகள் இன்னும் மறக்கவில்லை சென்றவனின் குரல் ஒலியை தொலைந்த அவன் உடலினைப்போல் அவன் குரலும் தொலைந்ததுவோ

Continue Reading

மனதின் கதை..

அ) கவிதைகள்

கையில் கிடைக்காத மனதின் கதை கேட்டேன் கற்பனை ஆனாலும் கதையில் சுவையுண்டு பிரம்மன் படைத்திட்டான் புவியில் மனித இனம் மறைந்தே இருப்பதுதான் மனதின் பெருமையென்று தேடி அலைந்திட்டான் அவனின் மனதுக்கிடம் புவியில் புதைத்திட்டால் குடைந்தே எடுத்திடுவான் வெளியில் மறைத்திட்டால் பறந்தே பிடித்திடுவான் எவ்விதம் வைப்பதென யோசனை மிகக்கொண்டான் கண்டான் சிறந்த இடம் மனிதன் உடலே அ·து எங்கும் தேடும் மனிதன் தன்னுள் தேட மாட்டான் தேடத் துவங்கும் அந்நாள் வாழ்வின் அர்த்தம் புரியும் கதையும் முடிந்தது அங்கே …

Continue Reading

நானும் நிழலும்

அ) கவிதைகள்

நிழலை பிடிக்கவேண்டி நானதைத் தொடர்ந்திட்டேன் தொடர்ந்தே நானும் செல்ல நிழலும் விலகக் கொள்ள ஆட்டம் தொடங்கியது எனக்கும் நிழலுக்குமாய் இடமும் வலமுமாக முன்னும் பின்னுமாக மேலும் கீழுமாக விலகி நழுவியது அதனை நானும் கண்டேன் பல்வேறு வடிவினிலே நெடிதும் சிறியதுமாய் சில நொடி மாயமாய் பிடிக்க இயலவில்லை சோர்ந்தே நானமர்ந்தேன் அருகே நிழலும் கண்டு உணர்ந்தேன் அந்நொடியே நானும் நிழலும் ஒன்று இறைவனும் அப்படித்தானோ?

Continue Reading

காதலிசம்

அ) கவிதைகள்

எல்லோரும் சொல்கிறார்கள்.. நொடிப்பொழுதும் உன்னை மறவாத என் மனதுக்கு மறதி வந்துவிட்டதுவாம்.. கணம்தோறும் உன்குரலில் மூழ்கும் என் செவிக்கு கேட்கும் சக்தி இல்லையாம் நாள்தேறும் உன்னுருவம் காணும் என் விழிகள் பார்வை இழந்துவிட்டதுவாம் இவையெல்லாம் உண்மைதானோ? கண் எதிரில் தோன்றும் காட்சி கருத்தினில் பதிவதில்லை காதினிலே விழும் வார்த்தை என்னவென்று விளங்கவில்லை என்ன நான் செய்தேனென்று எனக்கே புரிவதில்லை.. பிறகு.. அவர்கள் சொன்னது உண்மைதானோ?

Continue Reading

காதலிசம்

அ) கவிதைகள்

படிக்கும் முன் ஒரு முறை நுகர்ந்து பார்க்கத் தூண்டும் புத்தம் புதிய புத்தகத்தின் வாசமும்.. வீதியில் போகயிலும் நின்று நாசி வரை நுழைந்து செல்லும் அரைபடும் காப்பிக் கொட்டையின் வாசமும்.. வரண்டு போன பூமியில் இயற்கை அன்னை கருணை மழை தூரி கிளப்பி விட்டுச் செல்லும் மண் வாசமும்.. இவை எல்லாமும் கொடுக்கும் சந்தோஷம் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது உன் பெயரை (சு)வாசிக்கும் ஒவ்வொரு முறையும்

Continue Reading

காத்திருத்தல்..2

அ) கவிதைகள்

காதலில்.. காத்திருத்தல் சுகம் என்று யார் சொன்னது? காத்திருந்து காத்திருந்து மொழி மறந்து போனவனின் உளரலாய் இருக்கும். காத்திருத்தல்… நிமிடங்களை நீளச்செய்யும் விஞ்ஞான அதிசயத்தை வெகு சாதாரணமாய் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மவுன ராட்சசன் (இது மீள்பதிவு)

Continue Reading

காத்திருத்தல்-1

அ) கவிதைகள்

முதல்முறையா என்ன மணிக்கணக்கில் நிமிடங்களை எண்ணியபடி செவிகளை தீட்டியபடி தொலைபேசியை பார்த்தபடி உனக்காக காத்திருப்பது ஆனாலும் கூட காத்திருத்தலின் அவஸ்த்தை காலத்தின் உறைநிலை மனதின் தேடல் எதுவுமே பழையதில்லை அன்றலர்ந்த மலராய் அனுதினமும் எனக்காய்

Continue Reading