விகடனில் படித்த ஒரு சிறுகதையில் சாரத்தில் என் கவிதை உயிர்ப்பு இருண்ட உலகத்தில் இருவராய் உருக்கொண்டோம் எனக்கு நீதுணையாம் உனக்கு நான் துணையாம் அன்னை உணவளிக்க ஆனந்தம் பலகண்டோம் அவள்முகம் கண்டிலோமவள் அன்பினை காண்கிறோம் உயிரினில் பங்களித்தாள் எனக்கும் உனக்குமாக எத்துனை இன்பமிங்கே அத்துனை உயர்ந்தவளுக்குள் உலகம் சுருங்கிட்டதுவோ உருவம் பெருகிட்டதுவோ இங்கே இருந்திடலாம் என்றெண்ணிய எண்ணம்பொய்யாக இன்னொரு உலகம் போக நாளும் நேரமும் நெருங்க பயத்தின் மிகுதியில் நாமும் பலவிதம் யோசிக்கின்றோம் அங்கென்ன இருக்குமென்றாய் இவ்வுலகே …
Tag: கவிதை
மனசாட்சி
இன்பமும் துன்பமும் உனக்குள்ளே சிரித்தலும் அழுதலும் அதனாலே நண்பனும் பகைவனும் உனக்குள்ளே நன்மையும் தீமையும் அதனாலே இகழ்ச்சியும் முயற்சியும் உனக்குள்ளே உயர்தலும் தாழ்தலும் அதனாலே நட்புக் கரம் கொடுப்பான் பகையாய் உயிர் எடுப்பான் இன்பத்தில் திளைக்க வைப்பான் துன்பத்தில் மூழ்க வைப்பான் வெறுமையில் வாட வைப்பான் முழுமையாய் சிரிக்க வைப்பான் உன்னுள் இருப்பது மனசாட்சி உயிர் ஓயும் நாள்வரை ஓயாது அதன் அரசாட்சி.
ஒன்றுமில்லை
ஆம் நண்பா.. மறைந்த உன் நினைவுகளைத் தவிற வேறொன்றும் இல்லை விபத்தில் சிக்கியதும் வலியில் வாடியதும் நீ மட்டும் இல்லை.. என் மனதும் தான் வேதனைப் பூக்களை வார்த்தையில் கோர்த்தேன் மனதினுள் பூட்டிவைத்தேன் அது உனக்கேயானது தவழ்ந்து வருவது மாலையின் வாசமான உன் நினைவுகள் மட்டுமே வேறொன்றும் இல்லை..
சிட்டுக் குருவியின் தேடல் 20.12.2004
சிட்டுக் குருவிக்கு ஒருநாள் சிறகும் வளர்ந்தது கொஞ்சம் ‘பட்’டென அதனை விரித்து பறந்திட துடித்தது நெஞ்சம் மெத்தென சிறகுகள் விரிய உயர்ந்தது குருகதும் மெதுவாய் பறப்பது தன்னியல்பென்றே உணர்ந்திட மகிழ்ந்தது அழகாய் காடுகள் கடந்திட வேண்டும் கவின்பல கண்டிட வேண்டும் நாடுகள் சென்றிட வேண்டும் நன்மைகள் அறிந்திட வேண்டும் மேலோர் உரைத்திடக் கேட்டு மேன்மைகள் பெற்றிட வேண்டும் துவண்டிடும் மக்கள் கண்டு துயரங்கள் துடைத்திட வேண்டும் சிட்டுக் குருவிக்கு இங்கே சேர்ந்திடும் ஆசை கண்டீர் சிறகினை விரித்தே …
இருளும் ஒளியும் (25.11.02)
இருட்டில் இருப்பவனுக்கு தான் வெளிச்சத்தின் அருமை தெரியும் ஆனால் வெளிச்சத்திற்கு வந்ததும் அது மறந்துவிடுகிறது அவனுக்கு
மனம் (19.4.2003)
மனம் என்பதோர் மந்திரப் பேழை என்றுமே அன்பினை யாசிக்கும் ஏழை நினைவுகள் எத்தனை கனவுகள் எத்தனை அமிழாதிருக்கும் நிகழ்வுகள் எத்தனை அடிநெஞ்சில் புதையுண்ட பொக்கிஷம் சிலவும் அழகழகாய்த் துள்ளும் மீனாய்ச் சிலவும் இத்துனை நினைவுகள் எங்கனம் வாங்கினாய்? இன்னும் பலவர ஏன் தான் ஏங்கினாய்? இன்பமென துன்பமென எங்கனம் பிரிப்பேன்? அத்துனையும் பொக்கிஷமே இறுதிவரை காப்பேன்
தேடல் (24.7.2003)
உதிரத்தில் கலந்தென்னை ஊனுடம்பில் தேடுகின்றேன் இதயத்தின் உட்புகுந்து இடுக்கெல்லாம் தேடுகின்றேன் அறிவென்னும் ஒளிகொண்டு அகத்துள்ளும் தேடுகின்றேன் அன்பென்னும் விழிகொண்டு புறத்தினிலும் தேடுகின்றேன் உயிரென்பது தான் நானோ? உயிர் தங்கும் உடல் நானோ? அறிவென்பது தான் நானோ? அதைக்கடந்த நிலை நானோ? எது இங்கே நான் என்று என்னில் நான் தேடுகின்றேன் உடல் பிரிந்து உயிர் செல்லும் நாளில் தான் விளங்கிடுமோ?
மனதின் கல்வெட்டுக்கள்( 26.08.2004 )
காலமது உருண்டு செல்ல கனவென மங்கும் நிஜத்தில் மீண்டுமொரு பயணம் புரிய உதவும் மன கல்வெட்டுக்கள் சுவையில் மனம் மகிழ்ந்திட்டாலும் ‘சுட’ யில் அது வெதும்பிட்டாலும் படையல் பல காத்திருக்கும் பந்தி மன கல்வெட்டுக்கள் அன்றை நினைவில் அகமகிழ அதனை சிந்தை அபகரிக்க இன்றை சிறார் பின்னொரு நாள் இந்த ஏக்கம் அடைகுவரோ? கடந்து வந்த பாதை இனிது நடக்கும் பாதை என்றும் புதிது வாழ்க்கை பயணப் பாதையெங்கும் மைல்கல் மன கல்வெட்டுக்கள்
மனிதம் எங்கே?
ஏதோ விவரங்கள் தேடி ஏடுகள் புரட்டிக் கொண்டிருந்தேன் சிக்கின புகைப்படம் இரண்டு சிதைத்தன மனதினை கொன்று பட்டினிச் சாவின் நிலத்தில் பச்சிளங் குழந்தையின் தவிப்பை கழுகினுக்கு இரையாம் முன்னர் கவனமாய் படம் பிடித்திருந்தர் செந்நிறக் கனியின் விழாவில் சிக்கிய மங்கையைக் களிப்பில் போதையின் மாக்கள் கொண்டாட பொறுமையாய் படம் பிடித்திருந்தர் கழுகினை விரட்டவும் இல்லை காத்திடும் எண்ணமும் இல்லை மனதின் தேடலில் இனிமேல் மனிதமும் சேர்த்திடலாமோ?
வெளிச்சத்துளி
இருள் கவிந்த நள்ளிரவில் நிலவும் உறங்கும் காரிருளிள் மின் இணைப்பும் உறங்கிவிட அவஸ்தையிலே விழித்து எழுந்தேன் அந்தகனின் நிலையில் நானும் அன்னை உடன் எழுந்து சென்று அழகு விளக்கு ஏந்தி வந்து அக்கறையாய் ஏற்றி வைத்தார் பனித்துளியின் உருவம் கொண்டு உயிர்பெற்ற வெளிச்சத் துளியின் ஒளியெங்கும் பரவி நிற்க உறைந்து நின்றேன் அழகினிலே மின் இணைப்பு விழித்தவுடன் விழித்துக் கொண்ட பேரொளியில் துளி வெளிச்சம் மறைந்துவிட மகிழ்ச்சி இல்லை மனதில் மட்டும்.